இன்ட்லியில் இலவச விளம்பரங்கள் - புதிய பகுதி பற்றிய அறிவிப்பு

பிரபலமானவை » இந்து முன்னணிகள் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே - ஏன்?


12 Likes
சினிமா » thamizhoviya.blogspot.com - இந்து முன்னணிகள் துடிப்பது ஏன்?


சாமியார்கள் மதத்தின் போர்வையில் நடத்தும் அட்டூழியங்களும், ஆபாசங்களும் மக்கள் மத்தியில் சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டன.

பிரம்மச்சாரியம் என்றெல்லாம் பேசிக் கொண்டு இரவில் காமவேட்டையில் இறங்கும் விளம்பரம் பெற்ற சாமியார்கள் உண்டு. யோகா ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கோடி கோடியாக பணம் பறிப்பது பெருந்தொழிலாகவும் நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுகிறோம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறித்து தலைமறைவாகும் பேர் வழிகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பீர் சாமியார் என்றும், பீடி சாமியார் என்றும் சுருட்டு சாமியார் என்றும், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்றும், நிர்வாண சாமியார் என்றும் பல்வேறு பெயர்களில் உலா வந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதத்தின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தில், இந்து முன்னணி வகையறாக்கள் தந்திரமான ஒரு வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

சாமியார்களின் இந்த ஆபாச நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாத நிலையில், வேறு வழியின்றி இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிட முனைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இது பொது மக்களை ஏமாற்றும் திசை திருப்பும் வேலையாகும். இதே இந்து முன்னணிக் கும்பல் காஞ்சி சங்கராச்சாரியார் கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டாரே - பெண்கள் விஷயத்தில் சிக்கினாரே, ஊரே சிரித்ததே அப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே - ஏன்?

கண்டிக்காததோடு மட்டுமல்ல; கொலைக் குற்றத்தின்கீழ் வேலூர் சிறையில் இருந்த அந்த ஆசாமிக்கு ஊர் தோறும் பவளவிழாக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே ஊரெங்கும் கட் அவுட்டுகள் வைக்கப்படுகின்றனவே இவற்றைக் கண்டிக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரையிலாவது இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க வேண்டியதுதானே! ஆங்காங்கே இத்தகைய விழாக்களை நடத்திட முன் வரிசையில் இருப்பது இந்தக் கும்பல்தானே! அதில்கூட பார்ப்பன சாமியாரா _ பார்ப்பனரல்லாத சாமியாரா என்று இனம் காண்கின்றனர் போலிருக்கிறது.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பான் தேவநாதன் பெண்களிடம் காமவெறி விளையாட்டு விளையாடினானே. மானம் உள்ள பெண்கள்தான் துடைப்பத்தையும், செருப்பையும் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களேதவிர, எந்த இந்து முன்னணி, எந்த ஆர்.எஸ்.எஸ். தேவநாதனை எதிர்த்துப் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தன?

இப்பொழுது இந்த சாமியார்களை எதிர்த்து இந்துமுன்னணி வகையறாக்கள் போராடுவது உண்மை உணர்வின் அடிப்படையில்தான் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் குடி கொண்டிருக்கும் புராண ஆபாசங்கள், இதிகாச ஆபாசங்கள் இவற்றைப் பற்றி தெளிவான முடிவுக்கு அவர்கள் வர வேண்டாமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளை சிவன் கற்பழித்தான். முனிவர்களின் சாபத்தால் சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்தது என்றுள்ளதே. இது ஆபாசமானது இல்லை என்று கூறப் போகிறார்களா?

பிர்மாவின் மகளும் சரஸ்வதி; மனைவியும் சரஸ்வதி என்று எழுதப்பட்டுள்ளதே இது வெட்கித் தலைகுனியத்தக்கது அல்ல என்று இயம்பப் போகிறார்களா? நாரதன் என்ற ஆண் கடவுளும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து பெற்ற பிள்ளைகள் 60 என்று அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதி புகல்-கிறதே, இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்? குரு பத்தினி தாரையைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லப்படுவதற்கு என்ன சமாதானம்? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாஞ்சாலியை வருணிக்கிறதே மகாபாரதம் பஞ்சமா பாதகம் அல்லவா? அது மட்டுமா? அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசை கொண்டாள் அந்தப் பத்தினித் தேவதை என்று பாரதம் கூறுகிறதே பரிதாபத்துக்குரிய பாரத மாதா பக்திப் புத்திரர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் வாளால் வெட்டிக் கொன்று கொலை பாதகம் செய்தானே இதற்குக் கூறப் போகும் நாணயமான பதில் என்ன?

இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இந்து மதத்தின் ஆபாசக் கடல் இந்து மகா சமுத்திரத்தையும் தாண்டியது. இந்தக் கடவுள்கள் செய்த ஆபாசங்களையெல்லாம் அப்படியே கரைத்துக் குடித்தவர்கள்தானே இந்த இந்துமத சாமியார்கள்?

பின் எப்படிதான் நடந்து கொள்வார்கள்? எல்லாம் பகவான் காட்டிய வழிதானே! இந்து மதத்தின் மானம் கப்பலேறுகிறது மற்றவர்கள் முகத்தில் விழிக்க முடியவில்லை; சாதாரண மக்களும் காரித் துப்புகிறார்கள் என்றதும், தாங்களும் அவர்களை எதிர்ப்பதுபோல பாசாங்கு காட்டுகிறார்களே வீதிக்கு வந்து வேகமாக குரல் கொடுப்பதுபோல ஒரு நிர்ப்பந்தத்தால் காட்டிக் கொள்கிறார்களே அவர்களை நோக்கிப் பாயும் கேள்விக்கணைகள் இவைதாம். மூலக் கடவுள்களும் அவற்றின் முந்தானைவழி வந்த குட்டிக் கடவுள்களும் கற்பழித்து இருக்கும்போது, விபச்சாரம் செய்திருக்கும்போது, கொலைகளைச் செய்திருக்கும்போது அந்தக் கடவுள்களை நம்புகிற, வழிபடுகிற பக்தர்களான சாமியார்களும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா?

நடிகையுடன் கட்டிப் புரண்ட சாமியார்களைக் கண்டிக்கும் அதே வாயால், தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளுடனும் கிருஷ்ணபகவான் அறுபதாயிரம் கோபியருடனும் கட்டிப் புரண்டதையும் கண்டிக்க முன்வர வேண்டாமா?

இந்து முன்னணி வகையறாக்கள் ஒரு நெருக்கடி முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு விட்டார்கள். பகுத்தறிவு இருந்தால் சிந்திப்பார்கள். அவர்களிடம்தான் அதை எதிர்பார்க்க முடியாதே!
---------------------மின்சாரம் அவர்கள் 6-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Advertisement

2 Likes
Avatar paraneetharan Followers : 5 Follow Message Block செய்திகள் » paraneetharan-myweb.blogspot.com - மனிதத் தன்மைக்கே விரோத மான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரிய மதம்இந்து மதம்...
14 Likes
Avatar tamilsabari Followers : 9 Follow Message Block தொ.நுட்பம் » jeyamohan.in - இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது? அதற்கு இந்து ஞானமரபு என்ற பெயர்...
Discuss Unlike Share - 167 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

Comments

No one has commented on this article yet.

Log in to comment or register here.